Connect with us

முக்கிய செய்தி

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் திங்கட்கிழமை பணிக்குத் சமூகமளிக்க தீர்மானம் !

Published

on

அண்மைய வரி அதிகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்ட ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பணிக்கு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உறுப்பினர்களின் விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் விரிவுரைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

FUTA உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய வரி திருத்தத்திற்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்