Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகள் முதலாம் தவணைக்காக இன்று ஆரம்பம்

Published

on

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முழுமையான சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றியே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இடைக்கிடையே கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்