Connect with us

உள்நாட்டு செய்தி

UK விமானங்களுக்கு இலங்கைக்குள் தரையிறங்க தடை

Published

on

இன்று நள்ளிரவு முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களுக்குள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொவிட் 19 தொற்றின் புதிய அலை வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

உலகில் 40 க்கும் அதிகமான நாடுகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.