Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானம்

Published

on

பிற்பகல் 1 மணி முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், பஸ், லொறி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது என பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.