Connect with us

உள்நாட்டு செய்தி

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

Published

on

பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஜூன் 23 ஆம் திகதி பெற்றோல் தொகை நாட்டிற்கு வரும் எனவும், ஜூன் 24 ஆம் திகதி டீசல் தொகை நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.