Connect with us

உள்நாட்டு செய்தி

எரிசக்தி அமைச்சர் ட்விட்

Published

on

37,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றில் இருந்தும் மற்றும் 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் அடங்கிய கப்பல் ஒன்றில் இருந்தும் இன்று தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன்னர் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பலின் தரையிறக்கும் பணிகள் நாளை நிறைவடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.