Connect with us

உள்நாட்டு செய்தி

அட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் ஆணின் சடலம்

Published

on

அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் அட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆண் நீரில் குளிக்கும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது எவராவது கொலை செய்து அணைக்கட்டில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30ற்கும் 35ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து 17.01.2022 அன்று ஆணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.

அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் அட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆண் நீரில் குளிக்கும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது எவராவது கொலை செய்து அணைக்கட்டில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30ற்கும் 35ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.