மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணரும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஆணையத்தின் உடன்படிக்கையின் பேரில் இந்த...
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இம்முறை 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும்...
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலை பிரச்சினை காரணமாக சிக்கல் நிலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி – நிவித்திகல, ஜயபுரகம மற்றும் நுவரெலியா – ஹங்குரான்கெத்த பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 31 மற்றும் 45 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நிவித்திகல, ஜயபுரகம பிரதேசத்தில் ஆற்றில்...
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின்...
இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார். இரு நாள்...
இணையவழி மூலம் சந்தேகத்துக்குரியவர்களை நீதிமன்றங்களில் தொலைதூரத்தில் இருந்தே முன்னிலைப்படுத்துவதற்கு வசதியாக நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் முதல் நிகழ்வுகள் இன்று தென் மாகாணத்திலுள்ள மூன்று சிறைச்சாலைகளில் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள்...
இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.வேதன பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார்.எதிர்வரும் திங்கள்...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய யுபுன் அபேகோன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.அவர் 100 மீற்றர் ஓட்டத்தூரத்தை 10.18 விநாடிகளில் கடந்துள்ளார்.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.11 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட்...