Connect with us

Sports

இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது

Published

on

இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் திகதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, கிரிக்கெட்டின் மிக தீவிர ரசிகர்கள் மற்றும் அனைத்து விளையாட்டு போட்டி பிரியர்களுக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வருத்தத்துடன் இதனை தெரிவித்துக் கொள்கிறது. உள்நாட்டில் கொரோனா 4வது அலையை கருத்தில் கொண்டு, இரண்டு கிரிக்கெட் சங்கங்களும் ஒரு கூட்டு முடிவை எடுத்துள்ளன. 
இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்காமல் வீரர்களையும் இந்த சுற்றுப்பயணத்தையும் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.