Connect with us

உள்நாட்டு செய்தி

“சிலுவையில் இயேசு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார்”

Published

on

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற 2021 அரச நத்தார் விழாவில் அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இன்று (20) முற்பகல் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நத்தார் விழாவை முன்னிட்டு சமய அலுவல்கள் திணைக்களத்தினால் இரத்தினபுரி, கேகாலை மாவட்டத்திற்கான பல்லூடக ப்ரொஜெக்டர் மற்றும் திரை சப்ரகமுவ மாகாண கனிஷ்ட தேவாலயத்தின் கேகாலை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ரஞ்சன்மால் மொரேயஸிடமும், இரத்தினபுரியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 20 நூலக புத்தக தொகுதிகள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான 100 தர்ம உபதேச நூல்கள் இரத்தினபுரி தர்ம போதக பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் அமிலவிடமும் அரச நத்தார் விழாவில் வைத்து பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவால் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் போட்டியில் தேசிய மட்டத்திலும் 2021 நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டியிலும் வெற்றி ஈட்டிய மாணவ மாணவியருக்கு கேகாலை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ரஞ்சன்மால் மொராயஸ் உள்ளிட்ட வருகைத்தந்திருந்த சிறப்பு விருந்தினர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.