Connect with us

உள்நாட்டு செய்தி

நிதி நெருக்கடிக்கு பதில் சொல்லாமல் நிதியமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார்

Published

on

நாட்டில் பல்வேறு துறைகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் நிதி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

இவ்வாறு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளிநாடு சென்றமை ஏற்றுக் கொள்ள முடியாதது என ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G. L. பீரிஸ் பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாட்டில் இல்லாமை காரணமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வார ஆரம்பத்தில் வௌிநாடு சென்றமை குறிப்பிடத்தக்கது.