Connect with us

உலகம்

இந்திய முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேரின் இறுதி கிரிகைகள் நாளை

Published

on

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் சடலங்கள் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் சடலங்கள் வெலிங்டன் இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைக்காக கோவையில் இருந்து மருத்துவக்குழு ஒன்று குன்னூர் சென்றுள்ளது.

13 பேரின் சடலங்களும் பூரண இராணுவ மரியாதையுடன் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இறுதி கிரிகைகள் நாளை (10) நடைபெறவுள்ளது.