Connect with us

உள்நாட்டு செய்தி

நத்தார் தின நினைவு முத்திரை வெளியிடப்பட்டது

Published

on

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.

முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெரும அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.