Connect with us

உள்நாட்டு செய்தி

மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை அறுவர் பலி

Published

on

மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைசசாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பொர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் கொவிட் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஏனைய கைதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஸார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.