Connect with us

உள்நாட்டு செய்தி

தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை

Published

on

நாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த வகுப்புக்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அந்த வகுப்புக்களுடன் தொடர்புடைய பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடை அணிவது அத்தியாவசியம் கிடையாது என அமைச்சு கூறுகின்றது.