Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது – CVK

Published

on

கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.05 க்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (25) வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் கூடி கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எத்தனை தடைகளை அரசு விதித்தாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.