Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 40 பேர் கொவிட் தொற்றால் பலி

Published

on

நாட்டில் மேலும் 40 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,142 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 04 உயிரிழந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 03 ஆண்களும் 01 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்ட 19 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 36 பேர் ஒக்டோபர் 04 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்கள்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 521,781 ஆக அதிகரித்துள்ளது.