Connect with us

உள்நாட்டு செய்தி

ரணிலுக்கும், சஜித்திற்கும் இராதா சொல்வது

Published

on

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வே.இரதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் ஒற்றுமையாக இருந்திருந்தால் மைத்திரியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  “மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலகிச்சென்றவர்கள் மீள கட்சியில் இணையலாம் என திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலரும் இது தொடர்பில் எம்மை தொடர்பு கொண்டுள்ளனர். தவறை உணர்ந்து, கொள்கையை ஏற்று அவர்கள் இணைந்துகொள்ளலாம். கட்சியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.