Connect with us

Helth

மஸ்கெலியாவில் இன்று எழுவருக்கு கொவிட்

Published

on

மஸ்கெலியாவில் இன்று (23) கொவிட் 19 தொற்றுடன் எழுவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார அதிகாரி D.சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மத்திய மாகாண பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட மேல் மாகாதணத்தில் இருந்து பெரும்பாலானவர்கள் மலையக பகுதிகளுக்கு வந்தமையே தற்போதைய நிலைமைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் இதுவரை 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.