Connect with us

உள்நாட்டு செய்தி

“நாட்டை திறப்பதா, இல்லையா”

Published

on

எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நாட்டை திறப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள தேசிய கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திங்கட்கிழமையன்று நாட்டை திறப்பதாக இருந்தால், அந்த நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.