Connect with us

உள்நாட்டு செய்தி

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Published

on

இதுவரையில் தமது சம்பள உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் இன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நெற்று நேற்ற (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அவர் இதனை கூறினார்.

அதிபர், ஆசிரியர்கள் இன்று 45 ஆவது நாளாகவும் பணிபுறக்கப்ப தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.