Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய நோய் நோய் குறிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய நோய் நோய் குறிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் ஆவோசனைகளை வழங்கத் தேவையான வழிகாட்டுதல்கள் கோவையை அமைச்சு தயாரித்துள்ளது.

அவசர சந்தர்ப்பங்களின் போது வைத்தியசாலைகளை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட உள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.