Connect with us

உள்நாட்டு செய்தி

தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது

Published

on

யாழ். வடமராட்சி தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொணடமானாறு கடற்பரப்பிலிருந்தே இம்மூவரும் கடற்படையால் ரோந்துப் பணியின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 168 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் அவர்களை பொலீசாரூடாக நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று, சிலாவத்துறை,மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன