Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டை மூட மாட்டோம் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை

Published

on

சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 வைரசு தொற்று பரவலை கட்டுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில் ,எது நடந்தாலும் பரவாயில்லை.

நாட்டை மூட மாட்டோம் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.