Connect with us

உள்நாட்டு செய்தி

நாடு முடக்கப்படுமா? இதோ ஜனாதிபதியின நிலைப்பாடு

Published

on

நாட்டை முடக்குவதற்கு இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்கினால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதுடன் அன்றாடம் ஊதியம் பெறும் மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய தீர்மானமிக்க நிலைமைக்கு மத்தியில், வைத்திய ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளுக்கு அமைவாக சுய முடக்கத்திற்கு செல்லும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள், மக்களை கோரியுள்ளனர்.