Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடக்கம் புதன் கிழமை வரை நடைமுறைக்கு வரும் வகையில் பூட்டவும், பின்னர் நிலை அவதானிக்கப்பட்டு பூட்டுவது தொடர்பில் மறு அறிவித்தல் வழங்கப்படும் என கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்றும் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.