Connect with us

உள்நாட்டு செய்தி

வத்தளையில் சில பகுதிகளுக்கு இன்று (03) 24 மணித்தியால நீர் வெட்டு

Published

on

வத்தளையில் சில பகுதிகளுக்கு இன்று (03) 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர்க்குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இணைக்கும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, வத்தளை, நீர்க்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோல, வெலிகடமுல்ல, மருதானை வீதி, புவக்வத்த வீதி, கெரவலபிடிய வீதியின் ஒரு பகுதி, கலகஹதுவ, ஹெந்தல வீதியின் நாயக்க கந்த சந்தி வரை அனைத்து கிளை வீதிகள் மற்றும் அல்விஸ் நகரம் ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.