Connect with us

உள்நாட்டு செய்தி

இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு, இருவர் வைத்தியசாலையில்

Published

on

இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகனைத் தேடி வந்த கும்பல் ஒன்று அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.