Connect with us

உள்நாட்டு செய்தி

கச்சத்தீவு உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

Published

on

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இதை தெரிவித்தார்.

உள்ளூர் யாத்திரிகர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்த உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.