Connect with us

உள்நாட்டு செய்தி

கொட்டாவ மற்றும் களுத்துறை பகுதிகளில் நீர் வெட்டு

Published

on

கொட்டாவ மற்றும் களுத்துறை பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொட்டாவ, பெலன்வத்த நீர் சுத்திகரப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக பெலன்வத்த, எரவ்வல, சித்தமுல்ல, பிங்ஹேன சந்தி, கொரகஹபிட்டிய, மொரகெட்டிய வீதி மற்றும் நிவன்பிடிய ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பென்தொட்ட, பிம்புவல, பிலமினாவன்ன, பயாகல, மங்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

திருத்த பணிகள் காரணமாக இன்று இரவு 8 மணி முதல் 11 மணித்தியால நீர் வெட்டு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.