Connect with us

உள்நாட்டு செய்தி

SJB வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபை SLPP வசமானது

Published

on

ஐக்கிய மக்கள் சக்தியின் வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வசமாகியுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் குறித்த நகர சபையின் தலைவராக சசாங்க சம்பத் சஜ்ஜிவ செயற்பட்டு வந்த நிலையில் அவர் மத்திய மாகாண ஆளுநரினால் நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (15) முற்பகல் தலைவரை தெரிவுச் செய்ய இன்று மத்திய மாகாண நிர்வாக நிர்வாக ஆணையாளர் தலைமையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அமல் பிரியங்கர 7 க்கு 5 என்ற மேலதிக வாக்குகளை பெற்று புதிய தலைவராக தெரிவானார்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் குறித்த நகர சபையின் தலைவராக சசாங்க சம்பத் சஜ்ஜிவ செயற்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.