Connect with us

உள்நாட்டு செய்தி

கோண்டாவில் பகுதியில் பயங்கரம்

Published

on

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (30) இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.

சம்பத்தில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.