Connect with us

உள்நாட்டு செய்தி

காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Published

on

கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பகுதிகள், இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய….

யாழ்ப்பாணம் மாவட்டம்

காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதி,

கண்டி மாவட்டம்

சுதுஹம்பொல பகுதியை சேர்ந்த வெலமெட வீதி

நுவரெலியா மாவட்டம்

கொத்மலை, டன்சின் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மத்திய பகுதி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.