Connect with us

உள்நாட்டு செய்தி

செங்கலடி கறுப்பு பாலத்தில் விபத்து- இருவர் பலி

Published

on

மட்டக்களப்பு, செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்கு கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்த இராணுவ டிரக் வண்டியில் இன்று (25) பிற்பகல் 4 மணிக்கு கறுப்பு பாலத்திற்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழ் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதில் பயணித்த இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.