Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் நோய்வாய்பட இதுதான் காரணம்

Published

on

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 63 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணிவரை 63 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களே இவ்வாறு சுகவீனம் அடைந்து வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அவர்களிற்கு தடுப்பூசியினால் தாக்கம் ஏற்படவில்லை எனவும், உடல்நிலை மற்றும் பயம் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன் தெரிவிக்கின்றார்.

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையியே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *