Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பு

Published

on

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீடித்துள்ளார்.

அதன்படி ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு நாளை மறுதினம் (07) திகதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.