Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் 5,000 ரூபா கொடுப்பனவு

Published

on

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சிரமங்களுக்குள்ளான மக்களின் நலன் கருதி, இன்று (02) முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பயணக் கட்டுப்பாடுகளினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் தொழிலுக்குச் செல்லாமையால் அன்றாட வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை இன்று முதல் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.