Connect with us

உள்நாட்டு செய்தி

நீராட சென்ற குடும்பத்தர் சடலமாக மீட்பு

Published

on

நீராட சென்ற குடும்பத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோவிந்தன் கடைச்சந்தி பகுதியில் இவ்வாறு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

குறித்த குடும்பத்தர் திருவையாறு வின்சன் வீதி பகுதியை சேர்ந்த ரமேஸ்குமார் என்ற 30 வயதுடைய குடும்பத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீதி ஒப்பந்தகாரருடன் பணிபுரிவதாகவும், பணி முடிந்து இரணைமடு வாய்க்காலில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.