Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் அதிக உயிரிழப்புக்கள்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் 1,178 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 161,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 126,995 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில்  கொரோனா தொற்றினால்  ஒரே நாளில் அதிக உயிரிழப்புக்கள்  பதிவான முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இதில்   71 வயதுக்கு மேற்பட்ட  23 பேரும்,61 முதல் 70 வயதுக்குட்பட்ட 11 பேரும்   51மற்றும் 60 வயதுக்குட்பட்ட  7 பேரும் உயிரிழந்தவர்களுள்  அடங்குகின்றனர்,

அத்துடன் ஏனைய வயது பிரிவுகளுக்கு உட்டபட்ட மூன்று  பேர் உள்ளடங்குவதாகவும்   கொரோன தடுப்பு செயலணி தெரிவிக்கின்றது.