Connect with us

உள்நாட்டு செய்தி

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published

on

14 மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, லக்கம, பல்லேகம, ரிவஸ்டன் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் கஹவட்டகோரள, யட்டிநுவர, உடுநுவர, உடபலாத்த, கங்கஇஹல கோரளை, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, அக்குரண, பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, புலத்கொஹூபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, கிரியெல்ல, அயகம, கலவான, நிவித்திகல, எலபாத்த, பெல்மடுல்ல, கஹவத்த, ஓப்பநாயக்க, பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, பதுரெலிய, பாலிந்தநுவர, அகலவத்த, வெலிவிட்ட, இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தின் நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன, வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர குருநாகல், கம்பஹா, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.