Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடுகளால் ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லை – இராணுவத் தளபதி

Published

on

பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவற்காக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆடை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆடை உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய செயற்பாடுகளை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.