Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டை முடக்கும் தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி

Published

on

எதிர்வரும் தினங்களில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவானால் குறித்த பிரதேசத்தை கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது நகரங்களுக்கு இடையில் பயணிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

அதேபோல், நாட்டை முடக்கவோ அல்லது வேறு சட்டங்களை அமுல்படுத்தவோ எந்தவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், மக்கள் ஒன்றாகக் கூடுவதை தவிர்த்து கொரோனா பரவலைத் தடுக்க உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.