Connect with us

உள்நாட்டு செய்தி

அசேல சம்பத் விளக்கமறியலில்

Published

on

கைது செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்தை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் நேற்றைய தினம் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.