Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக விபத்து

Published

on

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதியில் பயணித்த கார் வீதியை குறுக்கிட்டு கடக்க முற்பட்டுள்ளது.

காரின் பின்னால் பயணித்த மற்றுமொரு ரிப்பர் வாகனத்தை முந்தி சென்ற ரிப்பர் வாகனம் கார் வீதியை கடக்க முற்படுவதை அவதானிக்காமல் முந்தி செல்ல முற்ப்பட்போது காருடன் மோதியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.