Connect with us

உள்நாட்டு செய்தி

“ஏப்ரல் மாதம் முதல் 1000 ரூபா சம்பளம்”

Published

on

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவியன் இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது போன்று ஆயிரம் ரூபா சம்பளம் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு செய்கைகளுக்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 1.5 பில்லியன் ரூபாவினை வரலாற்றில் முதல் தடவையாக ஒதுக்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிகரிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.