Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளை பசறை பிரதான வீதியில் விபத்து எழுவர் பலி

Published

on

பதுளை பசறை பிரதான வீதியில் 13 ஆம்; கட்டை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன்ஈ 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

மீட்பு பணிகள் இடம் பெறுவதாகவும், எனினும் பாரிய பள்ளத்தில் பஸ் விழுந்துள்ளதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.