Connect with us

Politics

மக்களை தூண்டிவிட்டு வீதியில் இருந்து கூச்சலிடும் கலாசாரம் ஒழிய வேண்டும் – நஸீர் அஹமட்

Published

on

உணர்ச்சி வசமாக மக்களைத் தூண்டி விட்டு வீதியில் நின்று கூச்சலிடும் கலாசாரத்தால் எதனையும் சாதிக்க முடியாது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் முனையவளவு பிரிவில் நேற்று இடம்பெற்ற இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை 70 வருடங்களுக்கு மேலாக போராடிய சிறுபான்மை இனம் சாதித்தது என்ன என்ற கேள்வியும் தற்போது பரவலாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அன்றிருந்த சிறுபான்மைத் தலைவர்கள் பலர் சாணக்கியமாகக் காய் நகர்த்தி விடயங்களைச் சாதித்தார்கள். அதனைக் கூட இன்று செய்ய முடியாமல் உள்ளது. கடந்த கால வரலாறுகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *