Connect with us

உள்நாட்டு செய்தி

காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை – TNA

Published

on

காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க   வேண்டியது இந்தியாவின் கடமை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது   காணி அதிகாரம் நிதி அதிகாரம் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க    வேண்டியது இந்தியாவின் கடமை. அதை இந்தியா செய்யும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.