Connect with us

உள்நாட்டு செய்தி

1000 ரூபா காத்திருப்புக்கு பதில் வழங்கிய அமைச்சரவை

Published

on

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்க்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பள நிர்ணய சபையின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான பிரேரணை சம்பள நிர்ணய சபையினால் நேற்று (01) உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது