முக்கிய செய்தி
எரிபொருள் விலை அதிகரித்தால் புதிய விலை..!

வற் வரி அமுல்படுத்தப்படும் போது எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கு 10.5% வரி மட்டுமே விதிக்கப்படும்.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 40 ரூபாவினாலும்,
95 ஒக்டேன் பெற்றோலின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும்,
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.